மஹிந்த இருந்த இடத்திலையே நாமலும் இருக்கிறார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -