ஊடகப் பிரிவு-
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் கல்வியை இடை நடுவில் விட்டு வெளிநாடுகளில் பணிப்பெண்களாகவும், துப்பரவுத் தொழிலாளர்களாகவும் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்பினை ஏற்படுத்திக்கொடுக்க கிழக்கில் கைத் தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமான நீண்டதொரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் விரைவில் கிழக்கில் பாரிய கைத்தொழிற்பேட்டை ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்போம் என்று தமிழ் நாடு சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் தமிழ் நாட்டிலிருந்து சீ.பாபு, சீ.கே.மோகன், எஸ்.ரவிச்சந்திரன், கே.மாரியப்பன், வீ.எஸ்.மணிமாறன், எஸ்.கணேஸ், எஸ்.அசோக், வீ.நடராஜன் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறித்த இச்சந்திப்பினை இலங்கை, இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.