கல்குடாத் தொகுதியைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், வாழைச்சேனை காகித ஆலையின் தவிசாளருமான அன்வர் நெளஷாத் தனது ஆதரவாளர்கள் சகிதம் இன்று 21.07.2016 மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் அன்வர் நெளஷாத் தனது 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முதலமைச்சரைக் கட்டித் தழுவி கட்சியில் இணைந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சிப்லி பாறூக், ஏ.எல்.தவம், எச்.எம்.லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.