நாமலுக்கு வீட்டிலிருந்து விசேட மெத்தை...!

கஸின் சிறைச்சாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, வைத்திய ஆலோசனையின் பேரில் படுத்து உறங்க விசேட மெத்தையொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த விசேட மெத்தை அவரின் வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் தலையணையை மாத்திரம் அவர் அங்கிருந்து பெற்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

சந்தேகநபரான மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தற்பொழுது “ஜே” எனும் சிறைச்சாலைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிறைச்சாலைக்கு அருகிலுள்ள வாட்டில் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 30 பேர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -