மகஸின் சிறைச்சாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, வைத்திய ஆலோசனையின் பேரில் படுத்து உறங்க விசேட மெத்தையொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விசேட மெத்தை அவரின் வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் தலையணையை மாத்திரம் அவர் அங்கிருந்து பெற்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சந்தேகநபரான மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தற்பொழுது “ஜே” எனும் சிறைச்சாலைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிறைச்சாலைக்கு அருகிலுள்ள வாட்டில் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 30 பேர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.