க.கிஷாந்தன்-
எமது உரிமைகளை நாம் பாதுகாப்பதன் மூலம் ஏனையோரின் உரிமைகளையும் நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் ஹட்டன் கிளைத்தலைவர் திரு. சிவனு சத்தியமூர்த்தி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட அங்கத்தினர்களின் புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஏனைய தொழிற்சங்கங்களுடன் பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசை ஒப்பிட்டுப்பார்க்கையில் நமது சிறப்புமிக்க வேகமான வளர்ச்சியானது எமது பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவரும், இ.தொ.கா. பொது செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் அவர்களை மேலும் பலப்படுத்துவதாக அமைகிறது.
எனவே நாம் தொடர்ந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதன் மூலமாகவும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட சேவையாளர்கள் ஒன்றிணைந்து உற்பத்தி திறனை உயர்த்துவதன் மூலமாகவும் பெருந்தோட்ட தேயிலை நிலங்களை அரசு உடமையாகவோ அல்லது அரச நிலமாகவோ மாறாமல் எமது பெருந்தோட்ட நிலங்களை பாதுகாத்து கொள்வதோடு எமது இந்திய சமுதாய பரம்பரை தலைதூக்கி வாழவும் முடியும் என்றார்.
அது மட்டுமன்றி இன்றைய தினம் எம்மோடு மேலும் 15 (பதினைந்து) புதிய அங்கத்தவர்கள் புதிதாக இணைந்து கொண்டது எமது பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் வளர்ச்சியை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க வெற்றி என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொது செயளாளரும் இ.தொ.கா. நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கௌரவ. கே. மாரிமுத்து அவர்களின் பனிப்புரைக்கமைய ஹட்டன் கிளைத்தலைவர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் கலந்துக்கொண்ட பெருந்திரளான சேவையாளர்களில் இருந்து பிரவுன்ஸ்வீக் தோட்ட அங்கத்தினர்களுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்கது.