S.சஜீத்-
கங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த நான்கு தினங்களாக நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் காங்கேயனோடை அல் அக்ஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவந்த மின்னொலியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று 17.07.2016 நேற்றையதினம் இடம்பெற்றன.
இதன்போது அரை இறுதி சுற்றிப்போட்டியில் பங்குபற்றிய நான்கு அணிகளிள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இரு அணிகள் அதாவது ஓலிம்பிக் மற்றும் கோல்ட்மைன்ட் அணிகள் இறுதி சுற்றிப்போட்டிகளுக்கு தெரிவாகியது இதில் ஒலிம்பிக் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை ஒன்றுக்கு பூச்சியம் என்ற வகையில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் பிரதம அதீதியாக கௌரவ அல்ஹாஜ் HMM. பஸீல் நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் கலந்து கொண்டனர்.