முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் மோசடி வழக்குகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மீண்டும் விசாரணகைளை முன்னெடுத்துள்ளது.
சஜின் வாஸ் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றமை தொடர்பில் கடந்த மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி செயலக்ததிற்கு சொந்தமான வாகனத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.