கிழக்கில் இந்திய விஜிபி நிறுவனத்தால் ஆடம்பரமான சிறுவர் பூங்கா - முதல்வரிடம் விஜிபி நிறுவனர் உறுதி

இந்தியா தமிழ் நாடு விஜிபி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரது கொழும்பு காரியாலயத்தில் சந்தித்து கிழக்கில் சிறுவர் பூங்கா அமைப்பது சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தியா தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள விஜிபி கோல்டன் பிரமாண்டமான சிறுவர் பூங்காவைப் போன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு விஜிபி கோல்டர் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைத்துத் தருவதாக முதல்வரிடம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு முதல்வரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார் விஜிபி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம். இந்நிகழ்வினை இலங்கை இந்திய இணைப்பாளர் மனவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -