வரி இல்லாத பொருட்களை சதொச வில் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நாடுபூராகவும் 309 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இதன் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், கூட்டுறவு விற்பனை நிலையங்களை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறிது நாட்களுக்கு சகல சதொச நிறுவனங்களிலும் வரி இல்லாத பொருட்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.