"வரி இல்லாத பொருட்களை சதொச வில் பெற்றுக்கொள்ளலாம்"

வரி இல்லாத பொருட்களை சதொச வில் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாடுபூராகவும் 309 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இதன் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், கூட்டுறவு விற்பனை நிலையங்களை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறிது நாட்களுக்கு சகல சதொச நிறுவனங்களிலும் வரி இல்லாத பொருட்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -