போதைப் பொருளை தடை செய்தால் மறுகனம் அரசாங்கதையும் மாற்றிவிடுவார்கள் – ஜனாதிபதி

புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பவற்றினால் வரும் வருமானத்தினால் மாத்திரமே திறைசேரியின் பொருளாதாரத்தை பலப்படுத்தலாம் என்ற கொள்கைக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது நாட்டின் திறைசேரி வருமானத்தை எடுத்து நோக்கினால் சிகரட் மூலம் வருடத்துக்கு 55 பில்லின் ரூபா கிடைக்கின்றது. மதுசாரம் போன்ற போதைப் பொருட்களினால் 60 பில்லியன் வருடாந்த வருமானமாக வருகின்றது.

இவ்வாறு இந்த போதைப் பொருளின் வருமானத்தினால் தான் திறைசேரியைப் பலப்படுத்தலாம் என்ற கொள்கையில் காணப்படும் திறைசேரி அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன்.

உடனடியாக, மதுவையும், சிகரட்டையும் நீக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தால், இதற்கு அடிமையானவர்கள் அடுத்த நாள் பாதையில் இறங்கி அரசாங்கதையும் மாற்றிவிடுவார்கள். இதனை செய்வதற்கு ஒரு முறையான முறைமையொன்று தேவை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மது ஒழிப்புச் சபையின் 104 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -