அரசாங்க தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார்.செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றுஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.