சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து இன்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீர் மாயமானது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது ஏ.என் 32 என்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம். 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றும், முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.