கூலித் தொழிலாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன.

தான் சார்ந்த குடும்பத்தின் தேவைகளின் சுமைகளைக் குறைப்பதற்காக,தனது உடலில் எப்படிப்பட்ட சுமைகளையும் சுமந்து வியர்வையில் குளித்து அந்த வியர்வையிலேயே தன் மேனி துடைத்து வாழும் உழைப்பாளிகள்தான் எமது பிரதேச நாட்டாம்பி என்னும் நண்பர்கள்.

இவர்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் வருமானம் இவர்களது அன்றாடத் தேவைகளுக்கே போதாமல் இருப்பதால், முக்கியமான ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கான தீர்வுகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.

இதில் முக்கியமானது இவர்களது தொழிலுக்கு கட்டாயத் தேவையான துவிச்சக்கர வண்டியாகும். தூர இடங்களுக்கு சுமைகளைக் காவிச்சென்று சேர்த்து அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானம் இவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் இவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கு பங்காற்ற முடியும்.

இதனை உணர்ந்த எமது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் இத் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்,ஏறாவூர் நகர சுமைதூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -