அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கு ஒழுக்காற்று குழு நியமனம்...!

எஸ்.அஷ்ரப்கான்-

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த கூட்டம் நேற்று (19)செவ்வாய்கிழமை இறக்காமம் இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த மாதாந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் யூ.எல். மப்றூக் உள்ளிட்ட நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்று கூடலில், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எம். இர்பான் அதிதியாக கலந்து கொண்டு பேரவையினை சிறப்பாக நடாத்திச் செல்வதற்கான ஆலோசனைகளை, வழிகாட்டல்களையும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது, அங்கத்தவர்களின் எதிர்கால தொழிற்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக இங்கு பேரவை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவும், இடர்களை தவிர்ப்பதற்காகவும் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழுவொன்றும் இதன்போது தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த ஒழுக்காற்றுக் குழுவில் பேரவையின் தலைவர்கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன், பொதுச் செயலாளர் எம்.ஸஹாப்தீன், பொருளாளர் யு.எல். மப்றுக் மற்றும் எம்.ஐ.அப்துல் மலிக், எம்.ஐ.எம். அஸ்ஹர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -