எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
மலேசியாவின் ஆர்.சாந்த கலாவின் கரை சேராத படகு எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிமாமணி ரி.எல்.ஜவ்பர்கான் தலைமையில் தொமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கட்டார் நாட்டின் நிதி ஆலோசகர் முஹைடீன் பாவாவும், கௌரவ அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை பேராதனை பல்கலைக்கழக சேமமடுவூர் சிவகேசனும், தலைமைய உரையையும் நூல் ஆய்வினையும் ரி.எல்.ஜவ்பர்கானும் வழங்க கவி வாழ்த்துக்களை கவிமாமணி மதியன்பன் மஜீதும், கிண்ணியா அமீர் அலி ஆகியோரும் வாழ்த்துரைகளை தடாகம் அமைப்பாளர் ஹிதாயா றிஷ்வியும், கவிஞர் அலி அக்பர் ஆகியோர் வழங்கினார்கள், நூல் பார்வையை கவிஞர் நவாஸ் சௌபியும் வழங்கினர் இதன்போது பிரதம அதிதியின் உரையைத் தொடர்ந்து ஏற்புரையையும், நன்றியுரையையும் நூலாசிரியர் சாந்த கலா வழங்கினார்.
இந்நிகழ்வில் கவிதை நூலின் முதற் பிரதியை கௌரவ அதிதி புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியின் முன்னிலையில் நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதன்போது சமுக சேவைக்காக பாடுபட்டுவரும் பவாஷா தாஹா, ஐனுல் மர்ழியா சித்தீக், சுலைமா ஏ. சமீ, காத்தான்குடி இக்பால்கான், வதிரி சி.ரவீந்தரன், ஹாலித் பாறூக், மர்ஹூம் டாக்டர் என்.எம்.அபூபக்கர், அன்வர் முஸ்தபா, ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத் ஆசியோர் தடாகம் கலை இலக்கிய வட்டத்தால் பொன்னாடைபோர்த்தி நினைவுச் சின்னம்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.