பிரித்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த வெற்றி...!

பிரித்தானிய வீசா பெற்றுக் கொள்ளும் போராட்டத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரகுவரன் பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கே இவ்வாறு வெற்றி கிட்டியுள்ளது.

ரகுவரன் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்பட்ட போதும் பல்வேறு முயற்சிகளின் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

தாய் தந்தையை இழந்ததன் பின்னர் மாமா ஒருவருடன் கடந்த 2005ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ரகுவரனுக்கு கடந்த ஆறு ஏழு மாதங்களாக நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்பட்டன.

எவ்வாறெனினும் ரகுவரனுக்கு அவர் வாழ்ந்து வந்த Flintshire ஐச் சேர்ந்த மக்கள் பேராதரவு வழங்கியிருந்தனர். ரகுவரனை நாடு கடத்தக் கூடாது என கையெழுத்து வேட்டை நடத்தி அதனை பிரித்தானிய உள்துறை அமைச்சிற்கு கோரிக்கையாக மக்கள் அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -