அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில் போலி கடவுச்சீட்டு அச்சகம்...!

போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகத்தினை பொலிசார் சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், நேற்று அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 75ற்கும் அதிகமான போலிக் கடவுச்சீட்டுகள் மற்றும் குவைட் வீசாக்கள் போன்றவையும் அச்சக உபகரணங்கள் சிலவற்றுடன் 2 இலட்ச ரூபாய் பணம், மோட்டார் வண்டி, முச்சக்கர வண்டி போன்றவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெக்கிராவை மற்றும் மரதன்கடவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -