திருகோணமலை: சட்டவிரோதமான அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவருக்கு விளக்கமறியல்..!

எப்.முபாரக்-
திருகோணமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் ஐந்து வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை அடுத்தமாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். திருகோணமலை தேவநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் ஆப்போது கைது செய்யாப்பட்டு திருகோணமலை பொலிஸாரினால் வழக்கு குறித்த நபருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்தநபர் ஐந்து வழக்குத்த வணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் வியாழக்கிழமை (21) கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை (22) பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -