அஷ்ரப் ஏ சமத்-
வகவம் வருடாந்த விழாவும் கௌரவிப்பும் சிறப்புக் கவியரங்கும் நேற்று (17) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வகவம் கவி வட்டத்தின் தலைவா் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. இங்கு கலாபுசனம், எஸ். ஜ நாஹூர்க்கணி, டாக்டா் தாசீம் அஹமத், தமிழ்த் தென்றல் அலி அக்பா், மேமன் கவி வகவம் செயலாளா் இளநெஞ்சன் முர்சீதீன் ஆகியோா் உரை நிகழ்த்தினாா்கள். புரவலா் ஹாசீம் உமா் , புரவலா் ஏ.பி. அப்துல் கையும். கௌரவ அதிதிகளாகவும் அரச கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளா் அனுசா கோகுள பிராண்ந்து பிரத அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனா்.
கலைவாதி கலீல், கலா விஸ்வநாதன், மேமன் கவி ஆகியோறும் கௌரவிக்கப்பட்டனா், மேமன் கவி தலைமையில் வலம்புரி கவிதா வட்டம் சிறப்பு கவியங்கத்தில் ரவுப் ஹசீர், ரீ.என். இஸ்ரா, எம். ஏ. எஸ் ஆறுமுகம், இப்னு அஸூமத், வதிரி சி. ரவிந்திரன், கலையழகி வரதராணி, தனபலான் ஆகியோா் கவிபாடிணாா்கள்.
இங்கு உரையாற்றிய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளா் -
அடுத்தமுறை கலாபுசனம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லீம் கவிஞா்கள் 24 பேர் கலாபுசனம் தெரிபு செய்யப்பட்டுள்ளனா், மேலும் வகவம் அடுத்த ஆண்டு விழாவை அரச கலாச்சார திணைக்களம் பொறுப்பெடுத்து நடாத்தும். மேலும் முஸ்லீம் கலைஞா்கள் அரச விருதுக்கு ஒரு பட்டியலை வகவம் தந்துவுமாறும் வேண்டிக் கொண்டாா்.