கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடாக திருவள்ளுவர் சிலைகள் வழங்கி வைப்பு...!

பா.திருஞானம்-
தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடாக திருவள்ளுவர் சிலைகள் இன்று கல்வி அமைச்சில் (25.07.2016) மாலை 3.00 வழங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.கல்வி இமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வீ.சீ.சந்தோசம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இன்று நடைபெற்ற இந்த தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி,ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி,தெரனியகலை கதிரேசன் மகாவித்தியாலயம், இரக்குவானை பரியோவான் மகா வித்தியாலயம், நாலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி, மாத்தளை இந்து கல்லூரி, தம்பிலுவில் மத்திய கல்லூரி அம்பாறை, இராமநாதன் இந்து கல்லூரி கொழும்பு, புத்தளம் இந்து கல்லூரி, மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரி, முல்லைத்தீவு முல்லியவளை வித்தியாநந்தா கல்லூரி, வவுனியா புளியங்குளம் ம.வி,கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கம், தென்மராட்சி கலை மன்றம் சாவகச்சேரி, மட்டக்களப்பு தமிழ் சங்கம், கட்டபறிச்சான் தமிழ் ம.வி ஆகியவற்றுக்கு இந்த சிலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

திருவள்ளுவருடைய குரல்களையும் அதனை அடியொட்டி மாணவர்கள் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் முகமாகவே இந்த சிலைகள் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மீதமாகவுள்ள பாடசாலைகளுக்கும் இந்த சிலைகளை வழங்க ஏற்பாடு செய்ய முடியுமா என சிந்தித்து வருகின்றோம்.

இந்த சிலைகளை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கும் எமது நாட்டிற்கும் இடையிலான நட்பு இன்னும் வலுப்பெறும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார். தற்பொழுது 16 சிலைகளும் கல்வி அமைச்சின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -