நோன்புப் பெரு­நா­ளை தொடர்ந்து முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு தொடர் விடுமுறை...!

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் வேண்­டு­கோ­ளை­ய­டுத்து கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் முஸ்லிம் மாண­வர்­க­ளி­னதும் ஆசி­ரி­யர்­க­ளதும் நலன்­க­ருதி எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திக­தி­களில் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை வழங்­கி­யுள்ளார்.

குறிப்­பிட்ட இரு தினங்­க­ளுக்கு மாற்­றீ­டாக எதிர்­வரும் ஆகஸ்ட் 15 ஆம், 16 ஆம் திகதியான விடு­முறை தினங்­களில் முஸ்லிம் பாட­சா­லைகள் நடாத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

நோன்பு விடு­மு­றைக்­காக கடந்த ஜுன் மாதம் 3 ஆம் திகதி மூடப்­பட்ட முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­வரும் ஜுலை 7 ஆம் திகதி திறக்­கப்­பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு வெளி­யிட்­டி­ருந்த பாட­சா­லை­க­ளுக்­கான விடு­முறை அட்­ட­வ­ணையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அமைச்சர் ஹலீமின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திக­தி­களில் விடு­முறை வழங்­கப்­ப­ட­வுள்ள முஸ்லிம் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -