ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கிழக்கு மாகாணத்தின் பாடசாலை மாணவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கந்தளாய் லீலாரட்ண விளையாட்டு மைதானத்தில் (27) அன்று ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ட்ரின் பெர்ணான்டொ, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியர் அருன சிரிசேன, ஜயந்த விஜேசேகர, கல்விச் செயலாளர் அசங்க அபயவர்தண, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம், உடற் கல்விக்கான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ.ஜி.பி.ஐ.தர்மதிலக, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களின் பாடசாலைகள் கலந்துகொள்ளும் இப்போட்டி நிகழ்ச்சிகள் 27 முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும், ஆரம்ப நிகழ்வின் கலாச்சார நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.