இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் மாதாந்த செயற்குழு கூட்டம் இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது வலது குறைந்த மூவருக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. காது கேளாத விதவையர் இருவருக்கு காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இளம் மாதர் முஸ்லிம் சங்க செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் -பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா - உப தலைவர்களான ஷலீனா மாஹிர் - மிர்சா அமீர் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர் .
தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-
ஊடக இணைப்பாளர்.