சிறைக்கைதிகளுக்கு யோகா கற்பிக்கும் நாமல் - கண்ணீர்விட்டு அழுத சிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, சிறைக்கைதிகளுக்கு யோகா கற்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரும் நாமல் ராஜபக்சவின் தாயாருமான சிரந்தி ராஜபக்ச, சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் இதன்போது மகனைப் பார்த்த சிரந்தி ராஜபக்ச கண்ணீர்விட்டு அழுததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -