நேபாளத்தின் ILC சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்பி பங்கேற்பு -படங்கள்



லக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ” என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில் நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை எமது நாட்டில் இருந்து சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கும் சவால்களை தெளிவுறுத்துவதற்கான ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -