எப்.முபாரக்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் சபை அமர்வின் போது இரண்டு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிகள் படையினர் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திடம் இருக்கும் காணிகளை விடுவித்து பொது மக்களிடம் கையளித்தல்.
மற்றும் அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளினால் பாரிய பிரச்சினையாகவுள்ளது அவ்வமைப்பினை தடைசெய்யக்கோரிக்கை விடுத்தல் போன்ற இரு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.