அறூஸ்-
அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லீம்களின் கல்வி, கலாச்சாரம், மத வழிபாட்டுத்தளங்கள், புனித அல்குர் ஆன் அதுபோன்று எம்மைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ், எங்கள் தூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் மிக மோசமான வார்த்தைகளைப் பாவித்து இனரீதியாக முஸ்லீம்களை அவமதிக்கும் இனவாதக் குழுவான பொதுபல சேனா என்னும் அமைப்பினை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாகாணசபைக்கு பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
திர்வரும் 21.07.2016 காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சபை அமர்வில் இது தொடர்பாக பெரும் உரை ஒன்றினையும் ஆற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.