Today>>பங்களாதேஷில் பெருநாள் தொழுகையின் போது குண்டுத்தாக்குதல்



பங்களாதேஷில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் வட பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெற்ற இடத்துக்கு அருகே சிறிய குண்டு ஒன்று வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தொழுகைக்காக சுமார் 200,000 பேரளவில் பாடசாலை மைதானத்தில் ஒன்றுகூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்பு படையினருக்கும், ஆயுத தாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், துப்பாக்கி சூட்டு சப்தங்கள் கேட்பதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -