வாக்களித்த மாற்றங்களை செய்யாமல் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் நாடு முழுவதிலுமுள்ள வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு அகில இலங்கை வர்த்தக சங்க ஒன்றியம் தீர்மானம் செய்துள்ளது.
இந்த வரித் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு உதவியும் வழங்காதிருக்கவும் அச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.