தாய் வேண்டும்-
கவலை பகிர்ந்து
கண்ணீர் துடைக்க.
ஆனால் சிலருக்கு
காவலாய் வைத்து
ஊர் மேய செல்ல.
தந்தை வேண்டும்-
கூட வாழ்ந்து
குதூகலம் காண.
சிலருக்கு
கூடை கூடையாக
கொண்டு வந்து கொட்ட.
மனைவி வேண்டும்-
தோளில் சாய்ந்து
துக்கம் போக்க.
சிலருக்கு
தொழிலில் மாய்ந்து
ரொக்கம் உழைக்க.
கணவன் வேண்டும்-
கண்ணைப் போன்று
காத்து நிற்க
சிலருக்கு
அண்ணியைப் பார்க்க
அதிக நகை வாங்க.
பிள்ளை வேண்டும்-
பாசம் காட்டி
பண்பாய் வளர்க்க
சிலர்க்கு
பாசாங்கு காட்டி
பயனை அடைய
மாமனார் வேண்டும்-
ஏதேனும் சண்டையை
இனிதாய் முடிக்க
சிலர்க்கு
சீதனம் முடிந்த பின்
சீர் வரிசை செய்ய
மதகுரு வேண்டும்-
எது சரி என்று
எடுத்துக் கூற
சிலருக்கு
பொது இடங்களில்
புரியாமல் ஓத
முரண்டு நிற்கும்
இரண்டுக்கும் நடுவே
திரண்டு நிற்கிறார்
சிலர் அல்ல பலர்.