இப்படியும் இருக்கிறார்கள்

Mohamed Nizous-

தாய் வேண்டும்-
கவலை பகிர்ந்து
கண்ணீர் துடைக்க.
ஆனால் சிலருக்கு
காவலாய் வைத்து
ஊர் மேய செல்ல.

தந்தை வேண்டும்-
கூட வாழ்ந்து
குதூகலம் காண.
சிலருக்கு
கூடை கூடையாக
கொண்டு வந்து கொட்ட.

மனைவி வேண்டும்-
தோளில் சாய்ந்து
துக்கம் போக்க.
சிலருக்கு
தொழிலில் மாய்ந்து
ரொக்கம் உழைக்க.

கணவன் வேண்டும்-
கண்ணைப் போன்று
காத்து நிற்க
சிலருக்கு
அண்ணியைப் பார்க்க
அதிக நகை வாங்க.

பிள்ளை வேண்டும்-
பாசம் காட்டி
பண்பாய் வளர்க்க
சிலர்க்கு
பாசாங்கு காட்டி
பயனை அடைய

மாமனார் வேண்டும்-
ஏதேனும் சண்டையை
இனிதாய் முடிக்க
சிலர்க்கு
சீதனம் முடிந்த பின்
சீர் வரிசை செய்ய

மதகுரு வேண்டும்-
எது சரி என்று
எடுத்துக் கூற
சிலருக்கு
பொது இடங்களில்
புரியாமல் ஓத

முரண்டு நிற்கும்
இரண்டுக்கும் நடுவே
திரண்டு நிற்கிறார்
சிலர் அல்ல பலர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -