ஏமாற்றி பணம் சம்பாதிக்க முயன்றவரை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் தரவேற்றியுள்ளார். இச் சம்பவம் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டவரை குறி வைத்த இருவர் இலங்கையில் இன்று விடுமுறை தினம் எனவும் கோவில் நிகழ்வொன்றில் யானை நிகழ்வொன்று இடம்பெறுவதாகவும் தெரிவித்து தனது நண்பரின் முச்சக்கரவண்டியில் ஏறுமாறு தெரிவித்துள்ளார்.
அதிலொருவர் முச்சக்கரவண்டி சாரதி, அந்த முச்சக்கர வண்டியில் குறித்த வெளிநாட்டவரை ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்குடனேயே குறித்த உரையாடல் இடம்பெற்றுள்து.
ஏமாற்று வித்தையை மிகவும் சூட்சுமமாக வீடியோ எடுத்த வெளிநாட்டவர் தனது யூடியூபில் தரவேற்றிவிட்டு சம்பவம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.