எம்.வை.அமீர் -
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனத்தினால் கடந்த 2016-07-27 முதல் முன்னெடுக்கப்படும் தொடர் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் 2016-08-03 ஆம் திகதியாகிய இன்றும் போராட்டங்கள் போடர்கின்றன.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் அப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்பாக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு அவர்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊழியர்கள் வீதியில் இறங்கி தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என கோஷமிட்டவாறு வலம்வந்தனர்.