வங்கிக்குச் சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்...!

காலி - அம்பலன்கொட பகுதியில் வங்கிக்குச் சென்ற பெண் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த பெண் தனியார் வங்கியில் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தினை பிரிதொரு வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, அந்தப் பெண் கூறியுள்ளார். 

இதேவேளை, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயதான அந்த பெண், அம்பலன்கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -