அட்டாளைச்சேனை ஊர்க்கரை வாய்க்காலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

பைஷல் இஸ்மாயில்-
ட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கொத்தணி முறையிலான வேலத்திட்டத்தினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் இன்று (18) காலை ஆரம்பித்து வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.கலீலுல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை 05ஆம், 09ஆம் பிரிவிலுள்ள ஊர்க்கரை வாய்க்காலை அகழ்ந்து சுத்தம் செய்து மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வழிந்தோடுவதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

குறித்த வாய்க்கால் சுத்தம் செய்யாமல் இருந்து வந்தமையினால் கடந்த மழை காலங்களில் ஏற்பட்ட வெள்ள நீரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள 05,08,09,14,15ஆம் பிரிவுகள் மிக அதிகமாக பதிப்படைந்திருந்தமையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதனை கருத்திற்கொண்ட இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -