எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை சாளம்பைக்கேணி-02, 6ஆம் கிராமத்தில் இறந்த நிலையில் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கீல் (வயது 57) இவர் சப்பு வேலை செய்தவாதகவும் தெரியவருகின்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் 6ஆம் கொளனி பிரதேசத்திலுள்ள நண்பரின் வீட்டிற்கு சென்று அவருடன் வயலுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இவர் இன்று நண்பரின் வீட்டிற்கு பக்கத்திலுள்ள வீட்டின் வாழைத் தோட்டத்திலுள்ள கிணற்றின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸ்ஸாக் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து சடலத்தினை பார்வையிட்டதுடன் வைத்திய பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.