கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த பாதயாத்திரையை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நிறைவு செய்வதற்கு மேடை அமைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாங்கள் ஹைப்பார்க் மைதானைத்தை நோக்கியே பயணிக்கிறோம் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பாத யாத்திரையை கெம்பல் மைதானத்தில் நிறைவு செய்வதற்கே பொலிஸாரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கடிதத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.