க.கிஷாந்தன்-
பொரலந்த ஹப்புதளை பிரதான வீதியில் ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் 24.08.2016 அன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் படுங்காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹப்புதளை பகுதியிலிருந்து பொரலந்த நோக்கி சென்ற கார் குறித்த பகுதியில் மோட்டர் சைக்களில் சென்ற திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரை மோதி விட்டு பள்ளத்தில் இருந்த வீட்டின் கெராஜ் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது கெராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் கார் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளாகிய காரின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.