ஏ.எம்.றிகாஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெமுன்னெடுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு வீடு மரம் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 01.08.2016 ஆரம்பிக்கப்பட்டது.
அக்கட்சியின் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் கேஎல்.அக்கீல் அர்ஷாத் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்ட கலைக்கப்பட்ட வட,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அக்கரைப்பற்று அலி உதுமானின் நினைவு நாளான 01.08.2016 ஆரம்பமான இத்திட்டத்த்pன்கீழ் வீட்டுக்கு வீடு மா மரங்கள் நடப்பட்டதுடன் மேலதிக மரங்களும் கையளிக்கப்பட்டன.
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இதில் இணைந்திருந்தனர்.