எஸ்.அஷ்ரப்கான்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்நோக்கிய பயணத்தை தொடர்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்லுமுகமாகவும் விசேடமாக பசுமை பேணல், சூழல் புரட்சி, பாதுகாப்பு என்பவற்றை ஊக்குவித்தல் என்ற தொனிப்பொருளில்'வீட்டுக்கு வீடு மரம்' வேலைத்திட்டம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் தேசிய ரீதியில் இன்று திங்கட்கிழமை 01ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக கல்முனைத் தொகுதிக்கான 'வீட்டுக்கு வீடு மரம்' அங்குரார்ப்பண நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேச மத்திய குழுக்களின் ஏற்பாட்டில் கட்சியின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மக்களுக்கு பயன் தரக்கூடிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.