வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னிடம் அனுமதி பெற வேண்டும் - அமைச்சர்களுக்கு ஜனாதிபதி

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் இருந்து செல்ல தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முழுமையான அனுமதியை பெற வேண்டும் என ஜனாதிபதி, கடிதம் ஒன்றின் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்து எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரச நிதி மற்றும் வெளிநாட்டு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் குழுக்களாக வெளிநாடுகளுக்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளதால் ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -