நிந்தவூரில் விபத்து - ஒருவர் பலி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை வயல் பகுதியில் வாய்க்கால் ஒன்றில் இருந்து இன்று (02) ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது- 42) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  உயிரிழந்தவருக்கு அருகில் இருந்து அவர் ஓட்டிச் சென்ற VBI-2070 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

மிகவும் வேகமாக பயணித்து நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதன் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -