பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
சம்பள முறைப்பாடுகள் உட்பட்ட ஏழு கோரிக்கைளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.