உலமாக்களுக்கு சாய்ந்தமருதில் உயர் கௌரவம்...!

எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-

கில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.காசீம் (கியாதி) தலைமையில் 2016-08-06 ஆம் திகதி மாளிகைக்காடு விஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் இப்பிராந்திய இளம் உலமாக்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அல் ஹாமியா அரபுக்கல்லுரியின் பிரதி அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.நபார், ஷார்கியா அரபுக் கல்லுரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.சலீம் மற்றும் அஷ்ஷேய்க் என்.எம்.அப்துல் முஜீப் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இங்கு ஜம்மியா பற்றிய அறிமுகவுரையை அஷ்ஷேய்க் என்.எம்.அப்துல் முஜீப் நிகழ்த்தினார். இதில் உலமாக்கள் ஒன்றிணைவதன் ஊடாகவே பிரதேசத்தின் ஒற்றுமையை கட்டுக்கோப்பில் வைத்திருக்க முடியும் என்றும் அதற்காக எல்லோரும் உறுதிபூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் ஒற்றுமையின் அடையாளமாக உலமாக்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார். இவற்றைத்தொடர்ந்து உலமாக்களை கௌரவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -