எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.காசீம் (கியாதி) தலைமையில் 2016-08-06 ஆம் திகதி மாளிகைக்காடு விஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் இப்பிராந்திய இளம் உலமாக்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அல் ஹாமியா அரபுக்கல்லுரியின் பிரதி அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.நபார், ஷார்கியா அரபுக் கல்லுரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.சலீம் மற்றும் அஷ்ஷேய்க் என்.எம்.அப்துல் முஜீப் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இங்கு ஜம்மியா பற்றிய அறிமுகவுரையை அஷ்ஷேய்க் என்.எம்.அப்துல் முஜீப் நிகழ்த்தினார். இதில் உலமாக்கள் ஒன்றிணைவதன் ஊடாகவே பிரதேசத்தின் ஒற்றுமையை கட்டுக்கோப்பில் வைத்திருக்க முடியும் என்றும் அதற்காக எல்லோரும் உறுதிபூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் ஒற்றுமையின் அடையாளமாக உலமாக்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார். இவற்றைத்தொடர்ந்து உலமாக்களை கௌரவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.