எஸ்.அஷ்ரப்கான்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆகஸ்ட் மாதக் கூட்டம் எதிர்வரும் 17.08.2016 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை சின்னப் பாலத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால் சகல அங்கத்தவர்களும் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.