இது ஒன்றும் மூட நம்பிக்கையல்ல- முன்னோர்களின் முன்னெச்சரிக்கைகளே...

ம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம், எலுமிச்சை பழம், மிளகாய், மிளகு.ஈச்சமுள் மற்றும் மஞ்சள்,தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும்.

கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது.எப்படியென்றால்….மின் வசதியில்லாத காலங்களில் நம் வீடுகளீல் இரவில பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும்.

இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது,,அப்பொழுது ஏதேனும் பூச்சியோ அல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்து விட்டால் என்ன செய்வது.அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும்,முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?

அதற்காக தான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விசம் மேலும் பரவாமல் இருக்க கயிற்றால்கட்டிவிடுவதால் விசம் பரவுவதை தடுக்கலாம்.

கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் படிகாரத்தை தேய்த்து விடுவதால் எரிச்சல் குறையும்,‪#‎விசக்கடியாக‬ இருந்தால் மிளகாய் அல்லது மிளகுகடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விசக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்து கொள்வார்கள்.

கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சைபழத்தை பிழிந்து கொடுப்பார்கள்எந்தமாதிரியான விசக்கடி என்பதை அறிய ஈச்சமுள்ளால்அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்து கொள்வார்கள்.

எட்டுகால்பூச்சி போன்றவை கடித்தால் தேங்காய் தண்ணிரும் தேங்காய்கீத்தையும் தின்றால் உடனடி விசமுறிவு ஏற்படும்.

சாதாரண‬ கட்டி வீக்கமாக இருந்தால் மஞ்சள்தடவி விடுவார்கள்.இது தான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.தொங்கிக் கொண்டு இருப்பது மூடநம்ம்பிக்கை சின்னம் அல்ல. முதலுதவி பெட்டகம். நன்றி லங்காபுரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -