ஆணாக நடித்து பெண்களை ஏமாற்றிய பெண் - நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கு

ப்பர் ஆண் உறுப்பை பயன்படுத்தி பல இளம்பெண்களிடம் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

பிரிட்டனில் உள்ளது பிரிஸ்டன் நகரம். இங்குள்ள நீதிமன்றத்திற்கு வினோதமான ஒரு வழக்கு வந்தது. அதாவது 23 வயது ஜெனிபர் ஸ்டைன்ஸ் ஆண் போன்ற செயற்கை ஆண் உறுப்பு அணிந்து 16 முதல் 17வயதில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளும்போது காண்டம் பயன்படுத்தி வந்துள்ளார். இத்துடன் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்போது அறுவெறுப்பான புகைப்படங்களையும் எடுத்துள்ளார். 

இந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வர அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாரி காட்டார் கூறுகையில், 

''கவனமாக செயல்பட்டு இளம் பெண்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். இதை காதல் என்றோ, காதலுக்கான காமம் என்றோ, காமத்துக்கு மட்டுமா என்றே என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஜெனிபருக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது'' என்றார். 

கடந்தாண்டும் இதேபோல், தன்னுடைய பெண் நண்பருடன் உறவு வைத்துக் கொள்ள ஆண் போல செயற்கையாக உறுப்பை மாற்றி ஏமாற்றிய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -