அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து

பைஷல் இஸ்மாயில் -

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கடும் காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து நேற்று (05) காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நேக்கி வந்த முச்சக்கர வண்டி மீது எதிரே வந்த மேட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், மேட்டார் சைக்கிள் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகி காரைதிவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு தாயும் ஒரு சிறு பிள்ளையும் தெய்வீகமாக உயிர்தப்பியுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -