தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்டவுட் இனந்தெரியாத நபர்களால் உடைப்பு...!

க.கிஷாந்தன்-

திம்புள்ள – பத்தனை காவற்த்துறைக்குட்பட்ட கொட்டகலை நகரத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்டவுட் இனந்தெரியாத நபர்களால் நேற்று  (08) இரவு கிழிக்கப்பட்டுள்ளதாக நகரத்திற்கு பொறுப்பான திம்புள்ள – பத்தனை காவற்த்துறை நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டினை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிவகுமார் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட கட்டவுட்டில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்களுடைய உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை காவற்த்துறையினர் நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -