புளொட் அமைப்பின் ஜெர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வ/வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று "கல்வியால் எழுவோம்" செயற்றிட்டத்தின் மூலம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் மாணவர்களுக்கு, துவிச்சக்கர வண்டிகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையின் தோழர் பவானந்தன் அவர்களுடன் இணைந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் வழங்கி வைத்தார்கள். 

இவ் நிகழ்வுகளில் திரு நா.இரத்தினலிங்கம்(குருபரன்), புளொட் அமைப்பின் பொருளாளர் திரு இளங்கோ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு ஜெகதீஸ்வரன்(சிவம்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணி சார்பான செயற்குழு உறுப்பினர் திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொருளாளர் திரு நிஷாந்தன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -