மூன்று தினங்களுக்கு கொழும்பில் இறைச்சிகளை கொள்வனவு செய்யாதீர்கள்...!

வெளிநகர்ப் பகுதிகளிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் இறைச்சிகளை, எதிர்வரும் மூன்று தினங்களுக்குக் யாரும் கொள்வனவு செய்ய வேண்டாமென மிருக வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மிருக வைத்தியர்களினால் குறித்த இறைச்சிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படாமையால், இறைச்சிகளைக் கொள்வனவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிருக வைத்தியர்கள், இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து 48 மணி நேரப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதன் நிமித்தம், கொழும்புக்குக் கொண்டு வரப்படுகின்ற இறைச்சிகள், எதிர்வரும் மூன்று தினங்களுக்குப் பரிசோதனைக்குட்படுத்தப்பட மாட்டாதென மிருக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -